Tuesday, 17 February 2015


ஆசிரியர் பதவி நேர்காணலுக்கு சென்று சோகமாய்த்திரும்பிய என் பழைய மாணவர் ஒருவரின் கதை கேட்டு எழுதியது...

கனவா? காசா? (காசு, பணம், துட்டு, மனி..மனி...)

கனவு காண்- வாசகம் சுவாசமானது.
கனவு  காண தூக்கம் தவிர்த்தேன்  
கனவு பலிக்க தூக்கம் துறந்தேன்.

நிலவைக்குறிவை நட்சத்திரம் கிட்டும்

இதையும் செய்தேன்.
நிலவு கிடைக்கவில்லை.
நட்சத்திரம்  தட்டும்போல் இருந்தது --
பேராசிரியர்தான்  ஆகவேண்டும்
பரவாயில்லை
பள்ளி ஆசிரியர் தேர்வுக்கு வந்தேன்…
கேள்வியோடு "இன்னொன்றும்" கேட்டார்கள்...
நட்சத்திரமும் நழுவிப்போனது !

கனவுச்சிறகுகள் கருக கண் விழித்தெழுந்தேன்...
அய்யய்யோ !!!
கனவு காண செலவிட்ட நேரத்தில்

கொஞ்சம் காசும் சேர்த்திருக்கலாமோ !

No comments:

Post a Comment